தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள்: ஒருவர் கைது

மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: ஒருவர் கைது 

by Staff Writer 12-02-2020 | 9:53 AM
  Colombo (News 1st) மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 500 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும் சுங்க அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டிய - பெலவத்த பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்குள் மிக சூட்சுமான முறையில் மறைத்துவைத்து மெக்ஸிக்கோவிலிருந்து ஐஸ் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.