ஹந்தான மலைக்குன்று செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

ஹந்தான மலைக்குன்றின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

by Staff Writer 11-02-2020 | 4:43 PM
Colombo (News 1st) கண்டி - ஹந்தான மலைக்குன்றில் தீ பரவக்கூடிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்குன்றுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையால் தீ பரவல் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஹந்தான மலைக்குன்றில் ஒரு வாரமாக இடைக்கிடையே சில பகுதிகளில் தீ பரவியதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மலைக்குன்றில் பரவிய தீ இன்று காலை கட்டுப்படுத்தப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஜானக ஹதுன்பதிராஜா தெரிவித்தார். ஹந்தான மலைக்குன்றில் பரவிய தீ காரணமாக சுமார் 60 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.