பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 11-02-2020 | 8:14 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.