ஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 11-02-2020 | 2:01 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் A.C. ரிஷ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த 65 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலை நடத்தியவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகத் தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு - காத்தான்குடி மற்றும் வாரிபொலவை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.