அரசினால் இதுவரை 2052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

அரசினால் இதுவரை 2052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

by Staff Writer 11-02-2020 | 5:23 PM
Colombo (News 1st) அரசினால் இதுவரை 2052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் 1798 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தெரிவித்தார். அதிக நெல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனிடையே, பொலன்னறுவை, மாத்தளை, கம்பஹா, கண்டி, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கை இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.