ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

by Staff Writer 10-02-2020 | 4:23 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியூடான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காலி முகத்திடலிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான ஒரு ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கலாசார அலுவல்கள் திணைக்களம், ரயில்வே தொழிற்சங்கம், பட்டதாரிகளின் தேசிய அமைப்பு, மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் திட்ட உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.