ஐ​ரோப்பாவின் வட பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை

சீனா கொரோனாவால் அவதியுறும் நிலையில் ஐ​ரோப்பாவின் வட பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை

by Fazlullah Mubarak 10-02-2020 | 12:24 PM

ஐ​ரோப்பாவின் வட பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சியாரா புயல் காரணமாக வார இறுதி நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 145 கிலோமீற்றர் வேகத்தில் சியாரா புயல் தென்கிழக்கு நோக்கி நகரும் என அந்நாட்டு வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. அயர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.