சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

by Staff Writer 09-02-2020 | 10:56 AM
Colombo (News 1st) கிளிநொச்சி - வலைபாடு கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 17 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 மீனவப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னாரைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.