by Staff Writer 08-02-2020 | 8:52 PM
Colombo (News 1st) FA கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை பொலிஸ் கழகம் சாம்பியனானது.
இறுதிப்போட்டியில் 5 - 4 என்ற பெனால்டி அடிப்படையில் சான்டர்ஸ் கழகம் (Saunders Sports Club) தோல்வியடைந்தது.
கொழும்பு குதிரைப்பந்தய திடலில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோலை போட்டனர்.
இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வாய்ப்பில் பொலிஸ் வீரர்கள் 5 கோல்களையும் சான்டர்ஸ் வீரர்கள் 4 கோல்களையும் போட்டனர்.
இதன்படி, தொடரில் பொலிஸ் கழக அணி சம்பியன் பட்டத்தை சூடியது.
பொலிஸ் அணியின் மஹேந்திரன் தினேஸ் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றார்.
வளர்முக வீரர் விருது சான்டர்ஸ் அணியின் ரிஃப்கான் மொஹமடுக்கு பரிசளிக்கப்பட்டது.