FA கிண்ணம்: இலங்கை பொலிஸ் கழகம் சாம்பியனானது

FA கிண்ண கால்பந்தாட்டம்: இலங்கை பொலிஸ் கழகம் சாம்பியனானது

by Staff Writer 08-02-2020 | 8:52 PM
Colombo (News 1st)  FA கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை பொலிஸ் கழகம் சாம்பியனானது. இறுதிப்போட்டியில் 5 - 4 என்ற பெனால்டி அடிப்படையில் சான்டர்ஸ் கழகம் (Saunders Sports Club) தோல்வியடைந்தது. கொழும்பு குதிரைப்பந்தய திடலில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் ​கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோலை போட்டனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பில் பொலிஸ் வீரர்கள் 5 கோல்களையும் சான்டர்ஸ் வீரர்கள் 4 கோல்களையும் போட்டனர். இதன்படி, தொடரில் பொலிஸ் கழக அணி சம்பியன் பட்டத்தை சூடியது. பொலிஸ் அணியின் மஹேந்திரன் தினேஸ் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றார். வளர்முக வீரர் விருது சான்டர்ஸ் அணியின் ரிஃப்கான் மொஹமடுக்கு பரிசளிக்கப்பட்டது.