கொரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்தார் இந்திய வம்சாவளி விஞ்ஞானி

by Bella Dalima 08-02-2020 | 5:07 PM
Colombo (News 1st) இந்திய வம்சாவளி விஞ்ஞானியான S.S.வாசன் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், தமது ஆய்வகத்தில் கொரோனா வைரஸை வளர்த்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாகவும் கொரோனா வைரஸிற்கு தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் எதிர்வரும் 16 வாரங்களுக்குள் மனிதர்களுக்கு குறித்த மருந்தை வழங்கி பரிசோதனையை முன்னெடுக்கத் தயாராகவுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானி S.S.வாசன் தெரிவித்துள்ளார். S.S.வாசன் ஆபிரிக்காவை அச்சுறுத்திய இபோலா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.