பொலிஸ் சார்ஜென்ட் கொலை: இருவருக்கு விளக்கமறியல்

வவுணதீவில் பொலிஸ் சார்ஜென்ட் கொலை: சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

by Staff Writer 07-02-2020 | 6:52 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸ் சார்ஜென்டின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது பொலிஸ் சார்ஜென்டின் தலையில் தடியால் தாக்கி கொலை செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 55 வயதான பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு - மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற அவர் நேற்று காலை இரத்தக் கரைகளுடன் சடலமாக மீட்கப்பட்டார். வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.