ரஞ்சன் ராமநாயக்கவிடம் குரல் பரிசீலனை 

ரஞ்சன் ராமநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

by Staff Writer 07-02-2020 | 4:41 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் மாதிரிகளை பரிசீலிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அழைத்துச்செல்லப்பட்டார். சிறைச்சாலைகள் அதிகாரிகளால் அவர் அழைத்துச்செல்லப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் மாதிரிகள் பெறப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வௌியாகியமை தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, ரஞ்சன் ராமநாயக்க இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.