by Staff Writer 07-02-2020 | 4:30 PM
Colombo (News 1st) நடிகரும் எழுத்தாளருமான முல்லை ஜேசுதாசன் காலமானார்.
மாரடைப்பு காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இன்று அதிகாலை அவர் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் முல்லைத்தீவு , மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஈழத்து திரைப்படத்துறையில் ஏராளனமான குறும்படங்களை இயக்கியுள்ளதுடன், முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று முல்லை யேசுதாசன் நடித்துள்ளார்.
முல்லை ஜேசுதாசன் சுமார் மூன்று தசாப்தங்களாக திரைப்படத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவராவார்.