பிரதான வர்த்தக துறைமுகமாகவுள்ள காங்கேசன்துறை 

காங்கேசன்துறையை பிரதான வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்

by Staff Writer 07-02-2020 | 5:04 PM
Colombo (News 1st) காங்கேசன்துறை துறைமுகத்தை பிரதான வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக 15 ஏக்கர் பொதுக்காணிகளையும் 35 ஏக்கர் தனியார் காணிகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.