தம்பலகாமம் பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 06-02-2020 | 8:14 AM
Colombo (News 1st) திருகோணமலை - கொழும்பு வீதியின், தம்பலகாமம் பகுதியில் 99ஆம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலகாமம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.