by Staff Writer 06-02-2020 | 7:38 AM
Colombo (News 1st) காலணி தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல சலுகைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் காலணி மற்றும் தோல்சார் உற்பத்தியாளர்கள் 3 இலட்சம் பேர் உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், காலணி உற்பத்திசார் 10 பாரிய நிறுவனங்களும் 30 நடுத்தர நிறுவனங்களும் 3000 சிறு அளவிலான உற்பத்தி நிறுவனங்களும் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.