இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: ரஜினிகாந்த்

by Staff Writer 06-02-2020 | 8:43 PM
Colombo (News 1st) இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அண்மையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.