வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி

by Staff Writer 05-02-2020 | 4:15 PM
Colombo (News 1st) வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாயும் 7 வயதான அவரது மகனுமே காயமடைந்துள்ளனர். இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பின்புறமாக செலுத்தியுள்ளார். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வேகமாக பின்புறமாக நோக்கிச்சென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, சைக்கிளை ஓட்டிச்சென்ற 36 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.