by Staff Writer 05-02-2020 | 9:47 AM
Colombo (News 1st) சேவையைக் கைவிட்டுச் சென்ற இராணுவத்தினர் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கு அல்லது உத்தியோகபூர்மாக சேவையிலிருந்து விலகுவதற்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில், இன்று (05) முதல் 7 நாட்களுக்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சேவையை கைவிட்டுச் சென்ற முப்படையினருக்காக இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொது மன்னிப்புக் காலத்திற்குள் இராணுவத்திலிருந்து சட்டரீதியாக விலகுவதற்கு அல்லது சேவையில் இணைந்துகொள்வதற்கு இராணுவ சிப்பாய்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.