சீனாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

சீனாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 05-02-2020 | 5:59 PM
Colombo (News 1st) சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை நாளை (06) முதல் மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. ஷங்காய் சர்வதேச விமான நிலையத்திற்கான சேவை நான்கிலிருந்து இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. கென்டன் நகருக்கு தற்போது முன்னெடுக்கப்படும் 7 விமான சேவைகளை மூன்றாகக் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.