சிரிய போர்: துருக்கிய ஜனாதிபதியின் எச்சரிக்கை

சிரிய அரச படைக்கு துருக்கிய ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 05-02-2020 | 10:02 AM
Colombo (News 1st) இட்லிப் மாகாணத்தில் சிரிய அரச படைகள் தொடர்ந்தும் முன்னேறுவதற்கு துருக்கி இடமளிக்காது என அந்நாட்டு ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆதரவு அரச படைகள் அப்பாவி மக்களை எல்லைகளை நோக்கி இடம்பெயருமாறு நிர்ப்பந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 8 துருக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் எர்டோகன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.