காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்கரையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்

by Staff Writer 05-02-2020 | 8:42 AM
Colombo(News 1st) யாழ். காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது நேற்று பகல் கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், நேற்றைய தினத்தில் கடற்படையினரால முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 157 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டடுள்ளது,. கடந்த 35 நாட்களுக்குள் 988 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதில் 700 கிலோகிராம் கேரள கஞ்சா வட கடற்பிராந்தியத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.