M.R.லத்தீபின் வெற்றிடத்திற்கு தகுதியானவர் யார்?

ஓய்வுபெற்ற M.R.லத்தீபின் பதவி வெற்றிடத்திற்கு தகுதியானவர் யார்?

by Staff Writer 05-02-2020 | 11:30 AM
Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R.லத்தீஃப் ஓய்வுபெற்றதை அடுத்து, ஏற்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பதவிக்குத் தகுதிவாய்ந்த ஒருவர் இன்று பெயரிடப்படவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பதவிக்கு 2 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பதில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களான லயனல் குணதிலக்க மற்றும் வருண ஜயசுந்தர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 41 வருடங்கள் பொலிஸ் சேவையாற்றிய M.R.லத்தீஃப் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.