ஒலுவில் துறைமுகத்தில் பிறிதொரு அபிவிருத்தி திட்டம்

ஒலுவில் துறைமுகத்தில் பிறிதொரு அபிவிருத்தித் திட்டம்

by Staff Writer 05-02-2020 | 1:14 PM
Colombo (News 1st) ஒலுவில் துறைமுகத்தை பிறிதொரு அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்படுத்துவது தொடர்பில் துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம், 2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட போதிலும் மணல் நிரம்புவதால், இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்நிலையில், குறித்த துறைமுகத்தை வேறொரு அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்படுத்துவதன் ஊடாக சிறந்த பயனைப் பெறுவதற்கு துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், குறித்த திட்டத்திற்கு தகுந்த முதலீட்டாளரைத் தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.