A9 வீதியில் பயணிகள் பஸ்களில் விசேட சோதனை

by Staff Writer 04-02-2020 | 5:51 PM
Colombo (News 1st)  A9 வீதியில் பல இடங்களில் பயணிகள் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வடக்கிலும் A9 வீதியை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓமந்தை, மாங்குளம், புளியங்குளம் மற்றும் புதூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பஸ்களில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். பஸ்கள் மூலம் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால், போதைப்பொருள் கடத்தற்காரர்களை கைது செய்வதற்காவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும், அதன் ஓர் அங்கமாவே A9 வீதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.