30,000 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் விநியோகம்

30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் நாளை விநியோகம்

by Staff Writer 04-02-2020 | 5:24 PM
Colombo (News 1st)  30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் நாளைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும். அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.