ஏறாவூரில் ஆடை உற்பத்தி வலயம்

ஏறாவூரில் ஆடை உற்பத்தி வலயம்

by Chandrasekaram Chandravadani 04-02-2020 | 7:58 AM
Colombo (News 1st) உள்நாட்டு ஆடை உற்பத்தி தொழில்துறையை மேம்படுத்துவதற்கு நெசவு கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தியை 9 வீதம் வரை உயர்த்துவதே தமது இலக்கு என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் ஆடை உற்பத்தி வலயமொன்றை உருவாக்கவுள்ளதாக நெசவு கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.