தேசிய தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

தேசிய தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 03-02-2020 | 5:38 PM
Colombo (News 1st) தேசிய தேயிலை ஏற்றுமதியை வருடாந்தம் 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையிடமிருந்து தேயிலையைக் கொள்வனவு செய்யும் நாடுகளை இலக்காகக் கொண்டு தேயிலை தொடர்பிலான அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தேயிலை செய்கைக்குத் தேவையான இரசாயன உரத்தை நிவாரண விலையில் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.