ஜெனரல் ஒலெக்  நாட்டிற்கு வருகை

ஜெனரல் ஒலெக் நாட்டிற்கு வருகை

by Fazlullah Mubarak 03-02-2020 | 10:55 AM

Colombo (News 1st) ரஷ்யாவின் தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் 5 நாட்கள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின்போது ரஷ்ய தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளார். நாளை (04) இடம்பெறவுள்ள சுதந்திரதினப் பேரணியிலும் அவர் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். லெக் செல்யுகொவ், தனது 45 வருட சேவைக்காலத்தில் 9 பதக்கங்களை பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.