உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே இலக்கு - K.L.ராகுல்

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே இலக்கு - லோகேஷ் ராகுல்

by Staff Writer 03-02-2020 | 3:26 PM
Colombo (News 1st) இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றுவதே தமது இலக்கு என இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார். அதற்காக சகலதுறைகளிலும் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தில் நேற்று நிறைவுக்குவந்த 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் லோகேஷ் ராகுல் 224 ஓட்டங்களை விளாசியிருந்தார். அத்துடன், நேற்று நடைபெற்ற ஐந்தாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக தலைவராகவும் லோகேஷ் ராகுல் செயற்பட்டிருந்தார். சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.