அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

by Staff Writer 02-02-2020 | 1:26 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் 'அங்கொடெ லொக்கா' ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை நேற்றிரவு முல்லேரியா பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததுடன் இதன்போது அங்கொட லொக்காவின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரியங்கர மற்றும் பெனியா என்ற அழைக்கப்படும் இருவரும் அங்கொட லொக்காவுடன் தொடர்புகளை பேணிவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் ஹெரோயின் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. முல்லேரியா பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு சந்கேநபர்கள் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.