கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண் குணமடைந்தார்

by Staff Writer 01-02-2020 | 6:59 PM
Colombo (News 1st) IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண் குணமடைந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் இருந்து நாளை (02) வௌியேறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 43 வயதான சீனப் பிரஜையான பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். குருதிப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது. விசேட சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் அவர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார். இந்நிலையில், அவர் குணமடைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.