புதிய கூட்டமைப்பின் அதிகாரங்கள் சஜித் பிரேமதாசவிடம் கையளிப்பு: நளின் பண்டார தெரிவிப்பு

by Staff Writer 31-01-2020 | 9:01 PM
Colombo (News 1st) உத்தேச புதிய முன்னணியின் அதிகாரங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நளின் பண்டார தெரிவித்துள்ளார். புதிய முன்னணியின் தலைவர், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பொறுப்புக்களுக்கு மேலதிகமாக பொதுச்செயலாளரை நியமிப்பது , ஒழுக்காற்று செயற்பாடுகள், வேட்புமனு குழுவின் பூர்வாங்க செயற்பாடுகளைக் கையாள்வது உட்பட அனைத்து அதிகாரங்களையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.