by Staff Writer 30-01-2020 | 12:29 PM
Colombo (News 1st) யாழ். சுண்டுக்குழி பகுதியில் வீடொன்றிலிருந்து 142 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சுண்டுக்குழி பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.