மாணவர்களுக்கான வவுச்சர்களின் காலாவதி நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர்களின் காலாவதி திகதி நீடிப்பு

by Staff Writer 30-01-2020 | 4:36 PM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள் நாளையுடன் (31) காலாவதியாகவிருந்ததாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை வவுச்சர்கள் செல்லுபடியாகும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.