நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

by Staff Writer 30-01-2020 | 8:20 AM
Colombo (News 1st) 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவையான வீதிகள் மாத்திரமே மூடப்படும் எனவும் அதனடிப்படையில், மூடப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்படவுள்ள வீதிப் போக்குவரத்துத் திட்டத்தை இன்று வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.