நெல் கொள்வனவிற்கான சந்தர்ப்பம்

மூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவிற்கான சந்தர்ப்பம்

by Staff Writer 30-01-2020 | 7:46 AM
Colombo (News 1st) மூன்று மாவட்டங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெற்கொள்வனவை ஆரம்பிக்க முடியுமென சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடவை, 150,000 மெற்றிக் தொன் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நேற்று நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல், நிர்ணய விலையான 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.