by Staff Writer 30-01-2020 | 2:12 PM
Colombo (News 1st) காலி வீதியில் NSA சுற்றுவட்டம் தொடக்கம் காலிமுகத்திடல் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியம் உள்ளிட்ட அரச ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த வீதி மூடப்பட்டுள்ளது.
தங்களின் தொழிலை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி காரணமாக கொழும்பு தாமரைத் தடாகத்தை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.