கடற்படையினர் இருவருக்கு விளக்கமறியல்

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: கடற்படை புலனாய்வுப் பிரிவினர் இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-01-2020 | 3:50 PM
Colombo (News 1st) கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான மனுவின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடற்படையின் புலனாய்வு உறுப்பினர்களான அருண துஷார மென்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகிய இருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 8 மற்றும் 9 ஆவது பிரதிவாதிகளாக இவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.