முகக்கவசங்களை இலவசமாக வழங்குமாறு சஜித் கோரிக்கை

முகக்கவசங்களை இலவசமாக மக்களுக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை

by Staff Writer 29-01-2020 | 8:21 PM
Colombo (News 1st) முறையற்ற வர்த்தகத்தைத் தடுத்து, சுகாதார பாதுகாப்புடன் கூடிய முகக்கவசங்களை இலவசமாக மக்களுக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற மருந்துப்பொருட்கள் மாஃபியாவைப் போன்று, முகக்கவச மாஃபியா தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிக்கையொன்றின் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அனர்த்தமொன்று நேர்ந்துள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி மோசடியான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிலர் முயல்கின்றமை கவலைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் நிலவும் அபாய நிலைமையைக் கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்புடன் கூடிய முகக்கவசங்களை இலவசமாக மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.