மாந்தையில் ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது

பல இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது

by Staff Writer 29-01-2020 | 9:30 AM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட வல்லப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.