by Staff Writer 29-01-2020 | 1:09 PM
Colombo (News 1st) தென் பிராந்தியத்தில் விளையும் தேயிலைக்கு உலக சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
சவுதி, குவைத், ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளில் தென் பிராந்திய தேயிலைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தேயிலையின் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது.