சீனாவிலிருந்த 176 இலங்கை மாணவர்கள் வரவழைப்பு

சீனாவிலிருந்த 176 இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு வருகை 

by Staff Writer 29-01-2020 | 8:04 AM
Colombo (News 1st) சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்றிரவு (28) நாட்டிற்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 484 மாணவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறியுள்ளார். இதேவேளை, தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கு, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.