உலக சந்தையில் கீழைத்தேய தேயிலைக்கு அதிகக் கேள்வி 

உலக சந்தையில் கீழைத்தேய தேயிலைக்கு அதிகக் கேள்வி 

by Staff Writer 29-01-2020 | 4:06 PM
Colombo (News 1st) உலக சந்தையில் கீழைத்தேய தேயிலைக்கு அதிகக் கேள்வி நிலவுவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மேலும் சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிலிருந்து கீழைத்தேய தேயிலைக்கான முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது. எனவே, தேயிலையின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்தல் மற்றும் வௌிநாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதியை நவீனமயப்படுத்தல் என்பன தொடர்பில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.