ஆயுர்வேதத் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆயுர்வேதத் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

by Staff Writer 29-01-2020 | 12:50 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆயுர்வேத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைகள் அடங்கிய கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலையின் வைத்தியர் H.P.K. அஜித் குமார குறிப்பிட்டுள்ளார். கிருமிக் கொல்லிகள் அடங்கிய ஆயுர்வேதக் கடதாசியூடாக புகை விசிறுதலும் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகை சாறுகளையும் இதற்கு பயன்படுத்த வேண்டும் என ஆயுர்வேத போதனா வைத்தியசாலையின் வைத்தியர் H.P.K. அஜித் குமார கூறியுள்ளார்.