மரினா கடற்கரையில் தீ ; எண்மர் உயிரிழப்பு

மரினா கடற்கரையில் தீ ; எண்மர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 28-01-2020 | 1:59 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள மரினா கடற்கரையில் தீ பரவியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது அதிகளவிலான படகுகள் தீக்கிரையாகியுள்ளன. இதன்போது பல படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தச் சம்பவத்தின்போது நீருக்குள் பாய்ந்த 7 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.