விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 28-01-2020 | 4:56 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வட மாகாண அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து, மீண்டும் அவரை அமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயற்பட்டமையூடாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளும் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.