சமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

சமன் ரத்னபிரியவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 28-01-2020 | 9:17 AM
Colombo (News 1st) எட்டாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்காக சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார். நிலவிய வெற்றிடத்திற்காக தகுதிவாய்ந்த ஒருவரை பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. குறித்த வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய தகுதியுடையவர் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.