இறால் வளர்ப்பை மேற்கொள்ளத் திட்டம்

குளங்களை அண்மித்த பகுதிகளில் இறால் வளர்ப்பை மேற்கொள்ளத் திட்டம்

by Staff Writer 28-01-2020 | 8:01 AM
Colombo (News 1st) நாடு முழுவதிலுமுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் இறால் வளர்ப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 4,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இறால் வளர்ப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இறால் வளர்ப்பை மேற்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 30,000 நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.