விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 27-01-2020 | 3:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில், விமான நிலையத்திற்கு வருகைதரும் மற்றும் வெளியேறும் பயணிகளின் வசதிக்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க, மத்தளை, இரத்மலானை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தம் ஜப்பானிய நிறுவனத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.